![](http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_1210173.jpg)
ஆனால், கடந்த வாரம் அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் நடந்த ஒரு தொழில் காட்சியில், ஏரோமொபைலின் இணை நிறுவனரும் சி.இ.ஓ., வுமான ஜுராஜ் வாகுலிக் பலரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த கண்காட்சியில் நிறுத்தியிருக்கும் இந்த பறக்கும் காரின் மாதிரியை விரைவில் வர்த்தக ரீதியில் வெளியிடுவதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன - என, ஊடகங்களிடம் தெரிவித்தார் வாகுலிக். 2017ல் ஏரோமொபைல் வெளியிடவிருக்கும் அந்த பறக்கும் கார் 435 மைல்கள் வரை பறக்கும். தரையிலிருந்து வானுக்கு கிளம்பும் வேகம் மணிக்கு, 81 கி.மீ., வானில் அதன் வேகம் மணிக்கு 124 மைல்கள் இருக்கும். வர்த்தக ரீதியிலான விமானங்களுக்கு இருப்பது போல வானை எட்டியதும் தானாகவே இலக்கை நோக்கி பறக்கும் -ஆட்டோ பைலட்- வசதியும் இருக்கும். இரண்டு பேர் அமர்ந்து செல்லக்கூடிய இந்த காரை இப்போதே சிலர் புக்கிங் செய்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment